• Breaking News

    சாத்தான்குளம் கொலை வழக்கு- கைதானவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்பட  ஐந்து பேர் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் , அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. 

    மேலும், இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்,  இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என நான்கு  பேரை சிபிசிஐடி  பொலிஸார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக சிபிசிஐடி  பொலிஸாரால் அறிவிக்கப்பட்டு இருந்த காவலர் முத்துராஜ் தூத்துக்குடியில் உள்ள அரசன்குளத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மருத்துவ பரிசோதனைக்குப் பின் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட முத்துராஜை வரும் 17 ஆம்திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad