• Breaking News

    தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ்

     சாத்தான்குளம் வழக்கில் தேடப்படும் நபராக காவலர் முத்துராஜை சிபிசிஐடி  பொலிஸார் அறிவித்துள்ளனர். 

     சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்  ஆகியோர் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

     
    மேலும், இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்,  இரண்டு  சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி பொலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி ஜஜி சங்கர் அறிவித்துள்ளார்.

      சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் உள்ளிட்டோரை  மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad