• Breaking News

    மூன்று மாதங்கள் குடிநீர் வழங்காததால் வீதிக்கு இறங்கிய யாழ். கல்லூண்டாய் பகுதி மக்களும் மாணவர்களும்!

     


    சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நவாலி கிழக்கு கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்களால் இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம்,  பொன்னாலை பருத்தித்துறை பிரதான வீதியின் கல்லூண்டாய் பகுதி வீதியினை வழிமறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


    இதன்போது வீதியின் குறுக்கே அமர்ந்த பொதுமக்கள், பாடசாலைச்சிறார்கள் தண்ணீர், தண்ணீர், தண்ணீர் என கோஷங்களை எழுப்பினர்.

    சண்டிலிப்பாய் பிரதேச செயலகமே  உரிய குடிதண்ணீரை ஒழுங்காக வழங்கு, மாவட்ட செயல்கமே, எங்களுக்கு சீரான நிரந்தர குடிநீரை உடனே வழங்குங்கள், எங்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய எங்கள் நலனில் உங்களுக்கு அக்கறை இல்லையா, எங்களுக்கு சீரான தண்ணீர் வினியோகம் கிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுவோம், பிரதேச சபை தவிசாளரே, நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன இன்னும் வேறு இடத்தில் மயானத்தின் அமைத்துக்கொடுக்க தங்களுக்கு இன்னும் நேரம் இல்லையா, இனி எங்கள் கிராமத்தில் உள்வரும் உடலங்களை வழிமறித்து சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபடுவோம், சிறு பிள்ளைகளாகிய நாங்கள் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் நோயற்றவர்களும் வாழ எங்கள் மீது தங்களுக்கு கரிசனை இல்லையா, அரசு அதிகாரிகளை உங்களுக்கும் உங்களைப் போன்று சிறு பிள்ளைகள் உண்டு அல்லவா உங்களுடைய பிள்ளைகள் தினந்தோறும் நீரை சுத்தமாக வைத்திருப்பது போல நாங்களும் மனிதப் பிறவிகள்தான் என கோஷமிட்டனர்.

    இதையடுத்து பருத்தித்துறை பொன்னாலை வீதியில் வாகனங்கள் போக்குவரத்து செய்யமுடியாது குவிந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீதியை வழிமறித்து இருந்த மக்களை மதுர அதிகாரிகள் குறித்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து தங்களுக்குரிய பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்த நிலையில் விதியை வழிமறித்த மக்கள் விலகி வீதியின் அருகே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெபனேசன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரதேச செயலர் யசோதா உதயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டு குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை உடனடியாக பெற்று தருவதாக தெரிவித்தோடு  குடியிருப்பு பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டதனை அடுத்து போராட்டம் நிறைவு பெற்றது.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad