• Breaking News

    வட்டு. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை - தொல்புரத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

     


    நேற்றையதினம் (11) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில், 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 100 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் அவரது வீட்டிலிருந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad