• Breaking News

    சந்தைக்கு வருகிறது இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!

     


    இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

    முன்னர் எரிபொருள் இல்லாமல் இயக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றை தயாரித்தவரான சசிரங்க டி சில்வா என்பவரே இந்தத மோட்டார் சைக்கிளையும் தயாரித்துள்ளார்.

    இந்த மோட்டார்சைக்கிள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் மொத்தமாக 120 கிமீ தூரம் வரை இயக்க முடியும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகம் வரை செல்லும் என்றும் அவர் கூறினார்.

    மோட்டார் சைக்கிளின் பொடி, செசி மற்றும் மின்சார பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த மோட்டார்சைக்கிள் எதிர்வரும் ஓகஸ்ட், 2022க்குள் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார்சைக்கிளின் விலை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad