• Breaking News

    புதையல் தோண்டிய ஒருவர் கைது - ஆறு சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!


     அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

    மன்னார் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும் அடம்பன் பொலிஸார் இணைந்து குருவில் வான் பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி பொருட்கள் இராணுவம் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

    தப்பியோடிய சந்தேக நபர்கள் 6 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad