• Breaking News

    வடக்கில் தொடரும் கூட்டமைப்பினரின் கையெழுத்து வேட்டை!

     


    பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் அச்சுவேலியில் இடம்பெற்றது.

    இந்தப் போராட்டம் இன்று காலை அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

    பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையிலேயே மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியான கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

    பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கிராமங்கள் தோறும் பொதுமக்களின் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    இன்றைய தினம் காலை ஏழு மணிக்கு அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான அணியினர்  பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad