• Breaking News

    முற்றுகைக்குள் சிக்குவாரா அரச தலைவர் கோட்டாபய?

     அமெரிக்காவில் “GoBackGota” என்ற பெயரில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    குறித்த செய்திக் குறிப்பில்,

    ஐ.நா பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

    ஐ.நா பொதுச் சபைக்கூட்டத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நாளை மறுதினம் புதன்கிழமை உரைநிகழ்த்தவுள்ளார்.

    இந்த ஆர்ப்பாட்டமும் அன்றைய தினத்தில் முற்பகல் 11 மணிக்கு ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக நடத்தப்படவுள்ளது.

    “GoBackGota” என்ற பெயரில் அணிதிரண்டு கூச்சல் எழுப்பி போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது - என்றுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad