• Breaking News

    யாழில் வீதி விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு தண்டப்பணம்

     யாழில் வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    வீதி விதிமுறைகளை மீறி மோட்டார்சைக்கிளில் பயணித்த மூவர் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 

    இதன்போது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு 50,000 ரூபாவும், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 25,000 ரூபாவும் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad