• Breaking News

    ஜனாதிபதியிடம் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள கோரிக்கை


    சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்க முன்வந்துள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ, அவர்கள் மரணிப்பதற்கு காரணமானவர்கள் தொடர்பிலும் பொறுப்புக் கூற வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உள்ளக பொறிமுறை ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது ஏமாற்றமளிக்கும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    அதேநேரம், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவின் ஐ.நா. பொதுச் சபை உரை முன்னேற்றமளித்தாலும், அதில் நம்பிக்கை கொள்ள முடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad