• Breaking News

    குருநகரில் பெருமளவு மஞ்சள் பொதிகள் மீட்பு!

    யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்றைய தினம் பெருமளவான மஞ்சள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

    கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது குறித்த மஞ்சள் பொதிகள் கடலில் படகு ஒன்றில் மறைத்து வைத்திருந்தது அவதானிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மஞ்சள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மஞ்சள் பொதிகள் சுமார் 369 கிலோ 650 கிராம் எடை உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad