• Breaking News

    நல்லைக் கந்தனின் தீர்த்தத் திருவிழா

     வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தின்  தீர்த்ததிருவிழா இன்று காலை சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு பக்திபூர்வமாக இடம்பெற்றது.

    கருவரையில் அருள்பாலித்து விளங்கும் அலங்கார கந்தனுக்கும், வசந்த மண்டவத்தில் அருள்பாலித்து விளங்கும் விநாயகர், வேல்முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை, சண்டேஸ்வரர் ஆகியதெய்வங்களுக்கான தீபராதனைகள் இடம்பெற்றுறது.

    பின் வசந்தமண்டத்தில் இருந்து அலங்கார வேல்முருகன் பரிவாரத் தெய்வங்களுடன் உள்வீதியுடாக வலம் வந்து தீர்த்தக்கேணியில் தீர்த்தத்திருவிழா இடம்பெற்றது.

    நவக்கிரகங்களுக்கான மூலமந்திர அனுஸ்டானங்கள் என்ப கேணியில் இடம்பெற்று சண்டேஸ்வரருக்கான நவதான அபிசேங்கள், ஆராதனைகளை பிரதம சிவாச்சாரியர் சிவஸ்ரீ சி.வைகுந்தன் குரு தலைமையிலான சிவாச்சாரிய அந்தணர்கள் நடாத்திவைத்தனர்.

    நாட்டில் எற்பட்டுள்ள அசாதாரண கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக ஆலய அறங்காவலர்கள், அந்தண சிவாச்சாரியர்கள், திருவிழா உபயக்காரர்கள் மட்டும் மஹோற்சவத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.










    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad