• Breaking News

    விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் உயிரிழப்பு

     தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் பிரதான மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று உயிரிழந்துள்ளார்.

    நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரது வீட்டில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

    1936ஆம் ஆண்டு பிறந்த குமார் பஞ்சரட்ணம் தபாலதிபராக ஆரம்பத்தில் பணியாற்றியிருந்தார். பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்துள்ளார்.

    இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் ஜோர்ஜ் மாஸ்டர் செயற்பட்டிருக்கின்றார்.

    இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.

    அன்றைய சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் தொடர்பான தீர்ப்பினை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad