• Breaking News

    யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமிகள் தென்பகுதியில் நீராடச் சென்றவேளை மாயம் - ஒருவர் சடலமாக மீட்பு

     


    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடிய வேளை காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இவ்வாறு நீரில் அடித்துச் சென்று காணாமல் போனவர்களில், 14 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    காணாமல் போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்து சென்ற நிலையில், மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தை வந்த நிலையிலேயே, இந்த குழுவினர், அவிசாவளை நோக்கி பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad