• Breaking News

    மீண்டும் தோற்கடிக்கப்பட்டது பாதீடு - பதவியிழந்தார் காரைநகர் தவிசாளர்...!

     


    காரைநகர் பிரதேச சபையின் பாதீடு ஒரு மேலதிக வாக்கினால் இரண்டாவது தடவையாகவும் இன்று தோற்கடிக்கப்பட்டது.

    காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் இயற்கை எய்தியமையிட்டு புதிய தவிசாளராக சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த மயிலன் அப்புத்துரை அண்மையில் தெரிவுசெய்யப்பட்டகருந்தார்.

    இதனையடுத்து அவர் சமர்ப்பித்த  முதலாவது வரவுசெலவுத்திட்டம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து இன்று (21) இரண்டாவது பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

    இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் காராசார விவாதம் இடம்பெற்றது. இதனையடுத்து பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

    பாதீட்டிற்கு ஆதராவாக ஈ.பி.டி.பியின் 2 அங்கத்தவரும் சுயேட்சைக்குழுவைச்சேர்ந்த 3 வாக்களித்திருந்தனர்.

    எதிராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த 3 அங்கத்தவர்களும், ஐக்கிய தேசியகட்சியை சேர்ந்த 2 அங்கத்தவர்களும் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒருவரும் வாக்களித்திருந்தனர்.

    இதனையடுத்து ஒருவாக்கால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இதனயடுத்து தவிசாளர் பதவியிழந்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad