• Breaking News

    குண்டு போடுவதில் தேசிய ரீதியில் தங்கப்பதக்கத்தினை வென்ற யாழ். இளைஞன்...!

     


    தேசிய ரீதியில் இடம்பெற்ற கொண்டு போடுதல் போட்டியில் யாழ். இளைஞன் ஒருவன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

    தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடந்தோறும் நடத்தி வரும் தேசிய விளையாட்டு விழாவின் 2021ஆம் ஆண்டுக்கான 33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சுகததாச விளையாட்டரங்கில் 19.12.2019 அன்று ஆரம்பமாகி கோலாகலமாக நடைபெற்றுவருகின்றது.

    அங்கு 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் குண்டு போடுதல் போட்டியில் 14.61 மீற்றர் தூரம் குண்டினை போட்டு, யாழ். மாவட்டத்தை சேர்ந்த சு.மிதுன்ராஜ் தேசிய ரீதியில் தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

    இவருக்கான பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம் சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad