• Breaking News

    கனடா செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

     


    கனடாவில் நிரந்தரமாக குடியேற ஆசைப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.

    இதன்படி அடுத்த வருடம் தமது நாட்டில் தற்காலிகமாக தங்கியுள்ள பலருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினருக்கு அந் நாட்டில் "நிரந்தர குடியுரிமை" வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் தற்காலிக அடிப்படையில் நாட்டில் வசித்து வருவதாக குடிவரவு அமைச்சர் ஜோன் பிரேசர் தெரிவித்தார்.

    கனடா தற்போது தனது மக்கள் தொகையை அதிகரிக்கவும், அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பயிற்சி பணியாளர்களை தமது நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.

    கனடா நாட்டில் சிரேஷ்ட மக்கள்தொகை அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள நாடு என்று கூறப்படுகிறது. கொவிட் தொற்றுநோய் காரணமாக, 2020 இல் 185,000 பேருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. இது 2019 உடன் ஒப்பிடும்போது 45% குறைவாகும்.

    கொவிட் தொற்று காரணமாக, 2020 இல் 185,000 பேருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. இது 2019 உடன் ஒப்பிடும்போது 45% குறைவாகும்.

    தற்போது நாட்டின் மக்கள்தொகை சுமார் 38 மில்லியனாக உள்ளது, மேலும் அதை ஆண்டுதோறும் ஒரு வீதமாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு மேலும் 411,000 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad