• Breaking News

    பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் விறகுகள்

     


    நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயுவுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக பொது மக்கள் பாரிய சிக்கல்நிலைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.  

    இந்த நிலையில், இலங்கையின் பல்பொருள் அங்காடிகளில்  விறகு மற்றும் மண் சட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  

    இலங்கையில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் மற்றும் மண்ணெண்ணை வரிசை ஆகியவற்றை அடுத்தே, பல்பொருள் அங்காடிகளில் விறகு விற்பனை செய்யப்படுவதை அவதானிக்க முடிகின்றது.


    ஒரு கட்டு விறகு 200 ரூபா முதல் 250 ரூபா வரையான விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அறிய முடிகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad