• Breaking News

    இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்போகும் பேக்கரி உற்பத்தி பொருட்கள்..!

     


    இன்று நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திபொருட்களை கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

    விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

    இனிவரும் காலங்களில் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் என அந்த சங்கம் கூறுகின்றது.

    இன்றிரவு  முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே, பேக்கரி உரியாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad