• Breaking News

    யாழில் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

     


    நாட்டில் இன்று (26-09-2022) இரவு 11.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


    வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை, புத்தளம், மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


    இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


    இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad