• Breaking News

    யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிவந்த 4 டிப்பருடன் சாரதிகள் கைது!

     


    யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் முறையான அனுமதிப்பத்திரமன்றி மணலேற்றிச் சென்ற நான்கு டிப்பரையும், அதன் சாரதிகளையும் கோப்பாய் போக்குவரத்து பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

    கோப்பாய் சந்திக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் போக்குவரத்து பொலிசார், நான்கு டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனையிட்டபோது அனுமதிப்பத்திரம் இன்றி மண்ணேற்றிச் சென்றமை தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து நான்கு டிப்பர் வாகனங்களையும், டிப்பரை செலுத்தி வந்த கிளிநொச்சி மற்றும் விசுவமடு பகுதியைச் சேர்ந்த நான்கு சந்தேகநபர்களையும் கோப்பாய் பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad