• Breaking News

    பிறந்து எழு நாட்களேயான சிசுவை விற்ற தாய் கைது!

     


    பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தையை 50,000 ரூபாவுக்கு விற்ற இளம் தாயொருவர் நேற்று (26.09.2022) மாலை அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


    இதன்போது அவருக்கு உதவியதாக கூறப்படும் அரச வைத்தியசாலை தாதி ஒருவரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 


    மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் வசித்து வந்த கெப்பிட்டிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே குழந்தையை விற்பனை செய்துள்ளார்.


    பொருளாதார நெருக்கடி காரணமாக, தமது பெண் குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு அவர் விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


    அத்துடன் தமக்கு ஏற்கனவே ஒன்றரை வயது மகனும் இருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். 


    மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad