• Breaking News

    "விதைப்போம் பயன்பெறுவோம்" எனும் தொனிப்பொருளில் நாட்டு விதைகள் வழங்கி வைப்பு!

     


    இன்றையதினம், வலி. மேற்கு பிரதேச சபை மற்றும் காவேரிக் கலாமன்றனம் ஆகியன இணைந்து "விதைப்போம் பயன்பெறுவோம்" என்னும் தொனிப்பொருளில் மக்களுக்கு நாட்டு விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சங்கானையில் நடைபெற்றது.

    இதன்போது தெரிவு செய்யப்பட்ட 65 பயனாளிகளுக்கு இவ்வாறு பயன்தரு விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

    நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்காரணமாக மக்கள் ஒருவேளை உணவினை உண்பதற்கே பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

    இந்த நிலையை இல்லாதொழித்து, மக்கள் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபட்டு தமக்கு தேவையான காய்கறிகள் மற்றும் தானியங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

    வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் காவேரி கலாமன்றத்தினர், சமூகமட்ட அமைப்பினர் மற்றும் நம் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad