• Breaking News

    இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் தேசிய பேரவையில் இணையோம் - சுமந்திரன் கடும்பிடி

     


    இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையப் போவதில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


    அதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பேரவையில் இணையாது என நாடாளுமன்றத்துக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


    ஆகவே இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசாங்கம் உடன் முன்வைக்க வேண்டும் என்றும் அதன் பின்னரே முடிவு அறிவிக்கப்படும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


    இருக்கின்றது என்றும் எதிர்காலத்தில் நாட்டின் தீர்மானங்களை அவர்களே எடுப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


    இந்த நிலையில் தேசிய பேரவை என்று கூறிக் கொண்டு உருவாக்கப்படும் சபையில் அங்கம் வகிப்பதில் எவ்வித பயனும் இல்லை என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad