• Breaking News

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எதிர்காலத்தில் மாற்றங்கள்!

     


    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடுகளில் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

    தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை அந்தந்த பதவிகளில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான மஹிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர்.

    அத்துடன், கட்சியின் பொருளாளர் லசந்த அலகியவன்ன, கட்சியின் பிரதிச் செயலாளர்களான ஜகத் புஸ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் தற்போதைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad