• Breaking News

    தந்தையை கொலை செய்துவிட்டு சடலத்திற்கு தீ மூட்டிய மகன் கைது!

     


    தனது தந்தையை மண்வெட்டியாலும், கத்தியாலும் வெட்டி கொலை செய்த மகனை மாலபே பொலிஸார் கைது செய்துள்ளனர்.


    ஹோகந்தர வித்யாராஜ மாவத்தையில் வீடொன்றுக்கு முன்பாக இந்த சம்பவம் நடந்தது.


    தந்தையை கொன்ற பின்னர், சடலத்திற்கு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


    ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கர வண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


    போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை அண்மையில் தாய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்குமிடையில் தகராறு அதிகரித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


    இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 28 வயதுடைய மகனைக் கைது செய்ய மாலபே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad