• Breaking News

    மகன் இறந்த சோகத்தில் தந்தையும் உயிர்மாய்ப்பு - துயரத்தில் மூழ்கிய கிராமம்!


    கேகாலையில் பாடசாலை மாணவர் ஒருவர் வீட்டில் உள்ள மின்கம்பத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இதனை அறிந்த தந்தையும் தன்னுயிரை மாய்த்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    கேகாலை ரங்வல ஜபுன்வல பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    இந்த ஆண்டு க.பொ.த சாதாரன தர பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த 17 வயது மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

    உயிரை மாய்த்து கொள்வதற்கு முன் அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். காதல் தொடர்பினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவன் உயிரை மாய்த்துள்ளமை தெரியவந்துள்ளது.

    53 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், பொற்கொல்லராக செயற்பட்டு வருகின்றார்.

    குடும்பத்தில் இரண்டாவது மகன் உயிரை மாய்த்தமையினால், மனவேதனையில் இரசாயன திரவத்தை பருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad