• Breaking News

    5 மாத கர்ப்பிணி பெண்ணை கணவன் கண்முன் வன்புணர்ந்த கொடூரர்கள்!

     


    5 மாத கர்ப்பிணி பெண்ணை கணவன் எதிரே 5 பேர் வன்புணர்வு செய்து கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் படான் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்ததுள்ளது.

    மனைவிக்கும், கணவனுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கர்ப்பமாக இருந்த அவர், 35கிலோ மீட்டர் தொலைவிள்ள தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மனைவியை தேடி கணவனும் அப்போது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளார். இரவு 8 மணியளவில் மனைவி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருப்பதை கணவர் கண்டார்.

    பல முறை கணவன் சமாதானம் செய்தும், மனைவி வராமல் விடாப்பிடியாக இருக்க அந்த வழியாக வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை விசாரித்தது. பின்னர் இருவரையும் சரமாரியாக தாக்கி மனைவியை தனியாக தூக்கி சென்று அந்த 6 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

    தொடர்ந்து, இரு சக்கர வாகனத்தில் கடத்த முயன்றது, அப்போது அந்த பெண் அலறல் சத்தம் கோட்டு பொதுமக்கள் அந்த கும்பலை விரட்டிதால் அந்த பெண்ணை அங்கேயே விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது.

    இதன்பின் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். கணவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அந்த கும்பலில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில் போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். தீவிர சிகிச்சையில் அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad