யாழில் விசேட தேவையுடைய இளைஞனை மோதித்தள்ளிய ரயில்...!
யாழ். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பினை நோக்கி இன்று அதிகாலை புறபட்ட ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இருந்த இளைஞர் ஒருவர் பலத்த காயத்துடன் யாழ். போதனா வைத்தியாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 07.45 மணியளவில் கொடிகாமம் - சாவகச்சேரி இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞன் விசேட தேவையுடையவர் எனவும் அதனால் ரயில் வந்தது தெரியாமல் அவர் அந்த தண்டவாளத்தில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரணையில் இருந்துதெரியவருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை