• Breaking News

    கொட்டும் மழையிலும் வலி. வடக்கில் காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டம்...!

     


    வலி. வடக்கு பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    இன்றையதினம் (17) காலை 9 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    இதன் போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் நில அளவை திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad