• Breaking News

    முல்லைத்தீவில் கரையொதுங்கிய டொல்பின்கள்...!

     முல்லைத்தீவு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முல்லைத்தீவு -அலம்பில் கடற்கரையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு உயிரிழந்த நிலையில் ஒன்பது டொல்பின்களின் உடல்கள் சிதறிக் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இறந்த மீன்களின் உடல்களில் பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்டதாகவும் 2 முதல் 6 அடி நீளம் கொண்ட மீன்கள் என்றும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலதிக விசாரணைக்காக உடற் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad