• Breaking News

    இம்மாத நடுப்பகுதியில் முடக்கம்...?

     இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால் இவ்வாறு முடக்கம் ஒன்றை அமுல்படுத்த அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அந்த செய்தியில் கூறுப்பட்டுள்ளது.

    இதன்படி டிசெம்பர் 23ம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை சுகாதார கட்டுப்பாடுகளுடன் முடக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad