• Breaking News

    யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல்!


     2022 ஆம் ஆண்டுக்கான  24 இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டம் தொடர்பான இணையவழிக் கலந்துரையாடல் இன்று (14.09.2022) மாலை யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றது.

    மேற்படி கலந்துரையாடலில் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக நலன்புரி அனுகூலங்கள் பெறும் பொதுமக்களை அடையாளம் காண்பதற்காக விண்ணப்பங்களை QR CODE மூலம் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக இணைய வழி ஊடாக கலந்துரையாடப்பட்டன.

    இந்தக் கலந்துரையாடலில் நலன்புரி நன்மைகள் சபை ஆணையாளர் பீ.விஜயரத்ன இணையவழி மூலம் கலந்து கொண்டார்.

    அத்துடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டச் செயலகப் பிரதம கணக்காளர், மாவட்டச் சமுர்த்திப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad