• Breaking News

    சங்கானையில் 14 பவுண் நகை திருட்டு - சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு...!

    மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை - நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை நேற்றையதினம் (06) களவாடப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

    குறித்த வீட்டில் உள்ளவர்கள் நேற்று மு.ப 10 மணிக்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு, நேற்று பி.ப. 5 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டினை அவதானித்தனர்.

    இதன்போது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மானிப்பாய் பொலிஸார் சந்தேகநபரைத்தேடி வலைவீசி வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad