• Breaking News

    ஏப்ரல் மாதத்திற்குள் உண்ண எதுவும் இருக்காது - கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பேராசிரியர்...!

     


    அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு கிடைக்காது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே எச்சரித்துள்ளார்.

    சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், மகா பருவத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட வேண்டிய போதிலும், தேவையான உரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும், கரிம திரவ உரங்களை மட்டுமே இடுவதன் மூலம் நாட்டில் போதுமான அறுவடையை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    மஹா பருவம் நாட்டில் மிக முக்கியமான மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட பருவம் எனவும், அந்தப் பருவத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாது எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

    விவசாயத்துறையில் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதால் உணவுப் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad