• Breaking News

    யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு...!

     


    யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்ற மாணவன் தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு, வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

    சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் கடந்த 13. 10. 2020 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா மரணமடைந்த மாணவன் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்தார்.

    இதன்போது முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் ,ஒரு புலன் விசாரணையினை மேற்கொள்ளுமாறு மன்றில் கோரியுள்ளார்.

    இதற்கமைய,முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாரிடம் தகவல்களை வழங்குமாறு நீதவான் பணிப்புரை விடுத்திருந்துள்ளார்.

    சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணை  புதன்கிழமை (08) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பிலான தகவல்கள் பதியப்பட்டு உள்ளதாகவும்,தொலைபேசி இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும், அதனை துரிதமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து தொலைபேசியின் இரசாயணப் பகுப்பாய்வு அறிக்கையை பெறுவதற்கு இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அறிவிப்பதாகவும் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பிலான அறிக்கையினை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம், பொலிஸ்மா அதிபருக்குப் உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad