• Breaking News

    யாழ். வலி. கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் சடலமாக மீட்பு...!

     


    வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (வயது 51) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

    சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளியில் வீடு ஒன்றிலிருந்து, வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தவேளை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

    வீட்டில் அவரது நடமாட்டமில்லாததை அவதானித்த அயல்வீட்டுக்காரர் வீட்டை எட்டிப் பார்த்த பொழுது துர்நாற்றம் வீசியுள்ளது.

    இதனையடுத்து உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad