• Breaking News

    மண்ணெண்ணெயை 800 ரூபாவிற்கு விற்பனை செய்த இருவர் பருத்தித்துறையில் கைது!


     பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பருத்தித்துறை இரண்டாம் குருக்கு தெருவில் விசேஷட சுற்றிவளைப்பு நேற்று (14.09) மாலை இடம்பெற்றது.


    இதில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த 380 லீற்றர் மண்ணெண்ணெயை பொலிஸார் கைபெற்றினர்.

    அந்த மண்ணெண்ணெயினை ஒருலீற்றர் 800 ரூபாவிற்கு விற்பனை செய்த நாவற்குழியினை சேர்ந்த ஒருவர் மற்றும் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குறித்த இரு சந்தேக நபர்களையும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த பருத்தித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad