• Breaking News

    பிறந்து நான்கு நாட்களேயான சிசு தாய்ப்பால் புரையேறி உயிரிழப்பு!

     


    யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த 4 நாட்களேயான சிசுவுக்கு தாய்ப்பால் புரைக்யேறி நேற்று  இரவு உயிரிழந்துள்ளது. 

    மயிலிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றிரவு 8.45 மணியளவில் தனது சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு குழந்தையை பார்த்தபோது குழந்தை அசைவற்றுக் கிடந்துள்ளது. இதனையடுத்து சிசுவை பரிசோதித்தபோது சிசு உயிரிழந்துள்ளது.

    பிரேத பரிசோதனையில் பால் மூச்சுக்குழாயில் புகுந்து புரைக்கெறி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

    சிசுவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad