• Breaking News

    வடக்கிற்கு வருகின்றார் சீனத் தூதுவர்...!

     


    சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு வியாழக் கிழமை  நிவாரணப்  பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சீனாவின் தூதுவர் நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    சீன தூதரகத்தால் வழங்கப்படவுள்ள இந்த நிவாரண விநியோகத்திற்காக  15 ம் திகதி மாலை சீனத் தூதுவர்   யாழ்ப்பாணம் வருகின்றார்.

    சீன தூதுவருக்கு  மாகாண ஆளுநர் செயலகத்தில் 15ஆம் திகதி  இரவு உணவு விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து 16ஆம் திகதி யாழில் 800 மீனவர்களிற்கு  வலை வழங்கப்படுவதோடு 2 ஆயிரம் மீனவர்களிற்கு நிவாரணப் பொதியும் வழங்கப்படவுள்ளது.

    இதேநேரம் மன்னார் மாவட்ட மீனவர்களில் 700 பேருக்கு நிவாரணப் பொதிகளும் 150 பேருக்கு வலைகளும் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மீன்பிடி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு வழங்கப்படும் நிவாரண வலைகள் தலா 8 ஆயிரம் ரூபா பெறுமதியாகவும் நிவாரணப் பொதிகள் 5 ஆயிரம் ரூபா பெறுமதியும் உடையவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad