• Breaking News

    வவுனியாவில் கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

     


    வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ். நோக்கி, புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கயேஸ் ரக வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டது.

    விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்தவர் 49 வயதுடைய பஞ்சநாதன் குகேந்திரன் என தெரியவந்துள்ளது.

    சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad