• Breaking News

    வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்குண்ட 5 வயது சிறுவன் பலி!!!

     


    வவுனியா - ஓமந்தை, பாலமோட்டை பகுதியில், உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 5 வயதுச் சிறுவன் ஒருவன் இன்று உயிரிழந்துள்ளான்.

    அதே பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுவனின் தந்தை நிலத்தினை உழுவதற்காக, வாடகைக்கு உழவு இயந்திரத்தினை அழைத்து வந்து உழவு வேலையில் ஈடுபடுத்தினார்.

    இதன்போது வாடகைக்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட உழவு இயந்திரத்தின் சாரதி, காணி உரிமையாளரது மகனையும், அவரது உறவினரது மகனையும் உழவு இயந்திரத்தில் ஏற்றி வைத்துக்கொண்டு உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    இந்த நிலையில் குறித்த சிறுவன் திடீர கீழே விழுந்து உழவு இயந்திரத்திற்குள் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளான். எனினும் சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.  இருந்தபோதும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த கந்தலதன் கனிஸன் என்ற 5 வயதுச் சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

    சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவமானது அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad