• Breaking News

    பல உயிர்களைக் காவுகொண்ட கிண்ணியா விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது...!

     திருகோணமலை - கிண்ணியா பகுதியில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாக பலர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும் திருகோணமலை பொலிஸாரால் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சாக்கேணியில் நேற்று குறித்த மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில்  அதில் பயணித்த 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad