• Breaking News

    யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் இன்று மின்தடை...

     வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் இன்று மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில் இன்று 21/11/2021ம் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை யாழ்.மாவட்டத்தில் செல்வ மஹால் திருமண மண்டபம், கொக்குவில் சந்தி, பூநாரிமடம் சந்தி, சிவப்பிரகாசம் வீதி, ஞானபண்டிதா பாடசாலை, கொக்குவில், மாவடி திருநெல்வேலி, நந்தாவில், பிரம்படி, சைலோ கோவில் வீதி பொக்ஸ் றெசோட், மருத்துவபீடம், அச்சுக்கூடம் கே.கே.எஸ் வீதி, மருத்துவபீட அரங்கம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.

    அதேபோல் முல்லைதீவு மாவட்டத்தின் 68வது பிரிவு டயலொக் கோபுரம் இரணைப்பாலை, தேவிபுரம் டயலொக் கோபுரம், வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு, இடைக்காட்டு சந்தி, இனியவாழ்வு இல்லம், இருட்டுமடு, குரவில் உடையார்கட்டு, மூங்கிலாறு வடக்கு, சுதந்திரபுரம், தேராவில், உடையார்கட்டு, உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு பாடசாலையடி, வள்ளிபுனம், வெள்ளப்பள்ளம் உடையார்கட்டு, 18வது இராணுவ முகாம் தேவிபுரம், 68ம் பிரிவு இராணுவ முகாம் இரணைப்பாலை, 683ம் பிரிவு இராணுவ முகாம் தேராவில், வெள்ளப்பள்ளம் சந்தி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad