• Breaking News

    கனடா மோகத்தில் சென்றவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை...

     


    தமிழ்நாட்டின் அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் கனடாவிற்கு தப்பிச் சென்றபோது மாலைதீவில் அகப்பட்ட ஈழ அகதிகள் 60 பேரினது பெயர் விபரங்களை மாலைதீவு அரசாங்கம் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    ஈழத்தில் இருந்து உயிர் தப்பி தமிழ்நாட்டிற்குச் சென்றவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி தமிழ்நாடு அகதி முகாம்களில் இருந்து தப்பிச் சென்று,

    நீண்டநாள் மீன்பிடி விசைப்படகு மூலம் கனடாவிற்கு பயணித்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக மாலைதீவை அண்டியுள்ள அமெரிக்கப்படைக் கட்டுப்பாட்டுத் தீவில் அகப்பட்டனர்.

    அவ்வாறு அகப்பட்டவர்களை அமெரிக்கப்படைகள் மாலைதீவு அரசிடம் கையளித்த நிலையில், அனைவரும் இந்தியாவில் இருந்து புறப்பட்டதனால் இந்திய அரசுக்கு, மாலைதீவு அரசு 60 பேரையும் பொறுப்பேற்குமாறு கோரி பெயர் விபரங்களை அனுப்பி வைத்துள்ளது.

    இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் அனைவரின் பெயர் விபரங்களுடன், எந்த முகாமில் இருந்து தப்பிச் சென்றவர்கள் என்ற விபரமும் எழுதப்பட்டுள்ளது.

    பெயர் விபரங்கள் வருமாறு...



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad