• Breaking News

    குருபெயர்ச்சி 2021: இந்த ராசியினருக்கு யோகம்தான்!

    வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2021ம் ஆண்டு நவம்பர் 13 ஐப்பசி 27 அன்றும், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி கார்த்திகை 4 அன்று நிகழ உள்ளது.

    ஒரு ஆண்டுக்கு ஒரு முறை குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார் . அதன் நடுவே குரு அதிசாரமாக தான் இருக்கும் ராசிக்கு அடுத்த ராசிக்கு சென்று, பின்னர் வக்ர பெயர்ச்சியாக மீண்டும் தன் பழைய நிலை அடைவது வழக்கம். ஆனால் இந்த முறை இந்த அதிசார காலம் முன்பைவிட அதிகமாக இருக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.இங்கு குரு பகவான் கும்ப ராசியில் அமர்ந்திருப்பதன் அடிப்படையில் குரு நல்ல அதிர்ஷ்ட பார்வை பலனைப் பெறப்போகும் 6 ராசிகள் யார், அவர்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க...

    மேஷம்

    குரு  பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறபோகும் 6 ராசிகளில் மிகவும் அதிக நற்பலனை அடையப்போவது மேஷ ராசி. ஏனெனில் குருவுக்கு நண்பரான செவ்வாய் ஆளக்கூடிய ராசி மேஷம் என்பதால், நிச்சயம் அளப்பரிய நன்மைகள் அடையலாம். உங்களின் எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறும். குரு உங்கள் ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகியவற்றின் மீது விழுவதால் உங்கள் முயற்சிகள் சிறக்கும். தைரியமாக முடிவுகளை எடுத்து செயலில் இறங்குவீர்கள்.புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காதலில் இருப்பவர்களுக்கு கை கூடும். திருமணம், புத்திர பாக்கியம் கை கூடும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புகழ் உண்டாகும். திருமணத்தால் ஆதாயமும், மறுமண முயற்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ற வரன் அமையும்.குல தெய்வ வழிபாடு செய்வது அவசியம்.

    மிதுனம்

    குரு பெயர்ச்சியால் யோகத்தை அள்ளபோகும் அடுத்த ராசி மிதுனம். ஏற்கனவே அஷ்டம சனியால் குடும்பத்தில் கஷ்டம், விபத்து, வேலையின்மை என மிக கடினமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு, குருவின் 5ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள். இதனால் அஷ்டம சனி கஷ்டங்கள் பெருமளவு குறையும்.திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். பெரியவர்களின் அருள், ஆசி கிடைக்கும்.இஷ்ட தெய்வங்களை தொடர்ந்து வழிபட்டு வருதல் நல்லது.

    சிம்மம்

    குரு பகவானின் பார்வை அமைப்பு இதுவரை ஆறாம் இடத்தில் விழுந்து, சங்கடங்களை அனுபவித்து வந்த சிம்ம ராசியினர். தற்போது குருவின் நேர் எதிர் பார்வையான 7ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது மிகவும் விசேஷமானது. 5, 8ம் இடத்திற்கு உரிய குரு பகவான். 5ம் இடத்தின் வேலையை 7ம் இடத்தில் அமர்ந்து செய்வதால் வேலை, தொழில், சுற்றுலா தொடர்பாக வெளிநாடு, வெளியூர் பிரயாணங்கள் செய்ய திட்டமிட்டு நிறைவேறாமல் இருந்தவர்களின் கனவு நிறைவேற நல்வாய்ப்பாக அமையும்.

    இதுவரை இருந்த கடன், வம்பு, வழக்கு, நோய், வில்லங்கங்கள் போன்ற மோசமான நிலை நீங்கி விடுதலைப் பெற வாய்ப்புகள் அமையும். திருமணம், குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு அவர்களின் விருப்பம் நிறைவேறி, குடும்பமே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிறப்பான வாழ்க்கை துணை உங்களுக்கு அமைவார்கள். உங்களுக்கு இருந்த சொத்து பிரச்னைகள், புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற கனவு, ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் உருவாகும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு இதுவரை குரு பகவான் 4ம் இடத்தில் அமர்ந்திருந்தார். அதாவது தடை ஸ்தானத்தில் இருந்தார். தற்போது 5ம் இடத்திற்கு செல்கிறார். குரு நின்ற இடத்தை விட, அவரின் பார்வை பலன் அதிகம் என்பது ஜோதிட விதி. அதிலும் குருவின் 9ம் பார்வை மிக சிறப்பானது. இதுவரை தடைப்பட்டு வந்த உங்கள் முயற்சிகள், செயல்களில் வெற்றி உண்டாகும். சம்பாதிக்கும் பணத்தை செலவழிக்க இருமுறை யோசிப்பார்கள் . திருமண தடையால் மனக்குழப்பத்திலிருந்த துலாம் ராசியினருக்கு நல்ல வரன் அமையும். வெளியூர், வெளிநாடு பயணங்களை எதிர்நோக்கி இருந்த துலாம் ராசியினருக்கு 9ம் பார்வையால் கனவு நினைவாகும். சிலருக்கு வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்க அனுமதி கிடைக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். போட்டி தேர்வில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு போட்டி, தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

    தனுசு

    தனுசு ராசிக்கு குரு நீச்ச ஸ்தானத்தில் இருந்தார். தற்போது ராசிக்கு 3ம் இடமான தைரியம், வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். ராசிக்கு 3ம் இடத்திலிருந்தாலும், குருவின் சிறப்பான பார்வை பெறும் இடங்களின் அடிப்படையில் தனுசு ராசியினர் மிக சிறப்பான பலனைப் பெறுவார்கள். குருவின் பார்வை, ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், இந்த இடங்களில் கிடைக்கும் நற்பலன்களால் அதிர்ஷம் பெறும் ராசிகளில் தனுசு ராசியும் ஒன்று. எந்த ஒரு முயற்சிகளும் வெற்றி தரும். திருமண முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ராசி நாதன் வலுப்பெறுவதாலும், ராசிக்கு 9, 11ம் இடங்களை குரு வலுப்படுத்துவதால் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும், இலக்குகள் அடைவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். அல்லது பழைய கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உயர் கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். மண வாழ்க்கையில் இன்பம் பெருகும்.

    கும்பம்

    குரு பகவான் ஜென்ம குருவாக கும்பத்திற்கு அமர்கிறார். இதைத் தவிர எல்லாமே உங்களுக்கு சிறப்பானதாக தான் இருக்கிறது. குருவின் பார்வையால் யோகம் அடையக்கூடிய ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று. ஜென்ம குருவாக இருந்தாலும், அவரின் பார்வை 5,7,9 ஆகிய இடங்களில் பதிவதால் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் குழந்தை பேறு உண்டாகும். திருமண தடை சந்தித்து வந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும்.  இதுவரை இருந்த சொத்து தொடர்பான வில்லங்கங்கள் நீங்கும். குருவின் பார்வையால் உங்களுக்குரிய பாக்கியம், யோகத்தை அனுபவிக்க எந்த ஒரு தடையோ அல்லது பிரச்சினையோ இருக்காது. விரய சனியின் தக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கும்ப ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியால் ஆறுதல் தருவதாகவும், அதைத் தாண்டி அதிர்ஷ்டம் தருவதாகவும் இருக்கும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad