• Breaking News

    நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தினை வெட்டும்போது அவ்விடத்தில் குவிந்த பொலிஸார்!


    நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு முன்னால் வீதியோரத்தில் உள்ள பழமை வாய்ந்த மரம் ஒன்றினை இன்று வெட்டும்போது அவ்விடத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டு காணப்பட்டனர்.

    இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

    ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி ஊடாக காரைநகர் செல்லும் வீதியின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக வீதியோரத்தில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த குறித்த மரமானது வெட்டவேண்டிய தேவை ஏற்பட்டது.

    அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் அந்த மரத்தினை வெட்டுவதற்கு வந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதியில் வசிக்கும் ஒருசிலர் மரத்தினை வெட்ட வேண்டாம் என எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதனால் குறித்த மரத்தினை வெட்டாமல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில் மக்கள் பெரும்பாலானோர் ஒன்றுகூடி, வீதி அபிவிருத்திக்காக மரத்தினை வெட்ட வேண்டுமாறு கூறி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷனுடன் கலந்துகொண்டனர்.

    இதனையடுத்து மரத்தினை இன்று வெட்டுமாறு அனுமதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மரம் வெட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆகையால் அப்பகுதியில் வன்முறைகள் ஏற்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.







    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad