• Breaking News

    யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு பணிப்பாளர் வழங்கிய முக்கிய செய்தி...

     யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வரும் நோயாளர்களை சற்று தாமதமாக வருமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரித்த அவர்,

    யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது.

    எனவே பொதுமக்கள் தற்போதுள்ள மழை குறைவடைந்த பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளதோடு சாதாரண சிகிச்சை பெறுவோர் தற்போதைய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்காது தாமதமாக வருமாறும் தெரிவித்துள்ளார்.   

    கிளினிக் பகுதி மற்றும்  இருதய சிகிச்சை கிளினிக் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக தற்போது சிகிச்சைகள் இடம் பெறாத நிலை காணப்படுகின்றது எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.   

    எனினும் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய விசேட வைத்திய சேவைகள் அனைத்தும் இடம்பெறுவதாகவும்  சாதாரண சிகிச்சைகள் மாத்திரம் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad