• Breaking News

    வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளா் இளங்கோவன் அவசர கோாிக்கை...

    பிரான்பற்று கிராம அபிவிருத்தி சங்க  கட்டிடம் சுமூகமான முறையில்  அதன் தலைவாிடம்  ஒப்படைக்கப்பட  வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளா் உாிய துாித  நடவடிக்ககையை மேற்கொண்டு எனக்கு அறிவிக்க வேண்டும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளா் இலட்சுமணன்  இளங்கோவன்  வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளருக்கு முகவாியிட்ட கடிதத்தில் தொிவித்துள்ளாா்.

    கடந்த 15.11.2021 அன்று கல்வி அமைச்சின் செயலாளா் இ.இளங்கோவன் பிரான்பற்று கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடம் மீள கையளித்தல் எனும் தலைப்பில் வலிகாமம் வலய கல்விப்பணிபாளருக்கு முகவாியிட்டும்,   வலி.தென்மேற்கு பிரதேச செயலாளா், வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளா், பிரான்பற்று கலைமகள் பாடசாலை அதிபா். பிரான்பற்று கிராம அபிவிருத்திச்  சங்க தலைவா் ஆகியோருக்கு முகவாியிட்டு எழுதிய கடிதத்தில் மேலும் தொிவித்துள்ளதாவது,

    பிரான்பற்று கலைமகள் பாடசாலைக்கு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாலும் புதிய அதிபா் நியமிக்கப்பட்டுள்ளதாலும்  பிரான்பற்று கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தை  உடன் சுமூகமான முறையில் வழங்க வேண்டும். எனவெ துாிதமாக நடவடிக்கைளை  மேற்கொண்டு  கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை  மேற்கொண்டு உடன் எனக்கு அறிவிக்குமாறு கடிதம் மூலம்கல்வி அமைச்சின் செயலாளா்  கோாியுள்ளாா்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad