• Breaking News

    விஜய் சேதுபதியை எட்டி உதைத்தால் பரிசு: அர்ஜுன் சம்பத்

    விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு சன்மானம் கொடுக்கப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    Vijay Sethupathy

    சமீபத்தில், விஜய் சேதுபதி பெங்களூர் விமான நிலையத்தில் நடந்து சென்றபோது, ஒருவர் ஓடி வந்து விஜய் சேதுபதியுடன் இருந்த நபரை எட்டி உதைத்தார். அந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் அந்த சம்பவ புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது தான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

     

    இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கூறப்பட்டிருப்பதாவது, தேவர் ஐயாவை அவமதித்த விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு சன்மானம் கொடுக்கப்படும். ஒரு உதைக்குகு ரூ. 1,001 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் சேதுபதி பற்றி அறிவிப்பு வெளியிட்டது உண்மை தான் என அர்ஜுன் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது, விஜய் சேதுபதியை எத்த முயன்ற மகா காந்தியுடன் பேசினேன். தேசிய விருது பெற்றதற்காக விஜய் சேதுபதியை வாழ்த்த மகா காந்தி விரும்பியிருக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி நக்கலாக பேசி, இதெல்லாம் நாடே இல்லை என்றிருக்கிறார் என்றார்.

    Arjun Sampath

    விஜய் சேதுபதியின் பதிலை கேட்டு மகா காந்தி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். நீங்கள் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் தானே, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவின் பூஜையில் கலந்து கொள்ளுங்கள் என்று விஜய் சேதுபதியிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவரோ, இந்த உலகில் ஒரே கடவுள்தான் என்றார். இதனால் தான் வாக்குவாதம் ஏற்பட்டது என்கிறார் அர்ஜுன் சம்பத்.

    விஜய் சேதுபதி இந்த நாட்டையும், பசும்பொன்னையும் அவமதித்துவிட்டார். நான் மகா காந்தியிடம் பேசிய பிறகே சன்மானத்தை அறிவித்தேன். மகா காந்தி சொல்வது போன்று விஜய் சேதுபதி அப்படி எதுவும் கூறவில்லை என்றால் அந்த குற்றச்சாட்டை அவர் ஏன் மறுக்கவில்லை என்று அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad